பூக்களால் இன்பமா துன்பமா?
மழையால் இன்பமா துன்பமா?
குழந்தைகளால்இன்பமா துன்பமா?
இயற்கையின் நெறியில்
இயங்கும்வினோத
மன இயல்பில்
இன்பமும் துன்பமும்
தோன்றித் தோன்றி மறையும்
மின்னலாய்…
பூக்களின் துக்கத்தை
விசாரிக்க யாரிருக்கிறார்கள்
யாருமற்ற பூந்தோட்டத்தில்
ஆறுதல் சொல்லித் தேற்றறுகின்றன
வண்ணத்துப்பூச்சிகள் இரக்கத்தோடு…
பூவும் இனிப்பும்
புன் சிரிப்பை உதிர்க்கும்
உறவை இணைக்கும்
வாதம், விவாதம்
உறவை முறிக்கும்!
No comments:
Post a Comment