எமன்
அதிர்ந்துப் போனான்
நிசிகேதா,
நான் சொல்வதைக்கேள்
என்னிடம்
எதைவேண்டுமானாலும் கேள்
மரணத்தைப் பற்றிய
மர்மம் மட்டும் கேட்காதே
மன்னிக்க வேண்டும்
அய்யனே,
மரணம் என்றால்
என்னவென்று
அறியாமல் இங்கிருந்து
அகல மாட்டேன் என்று
நிசிகேதன்
மூன்று நாட்கள்
உண்ணாவிரதம் இருந்தான்
சத்தியாகிரகம் செய்தான்
இந்த
இளைஞன்தான்
எமனிடம்
உபதேசம் பெற்ற
முதல்சீடன்
வேத இலக்கியத்தில்
உண்ணாவிரதமிருந்த
முதல் போராளி.
No comments:
Post a Comment