வாசல்கேட்டில்
எப்பொழுதும் காத்திருக்கிறது
தபால் பெட்டி.
கடிதம் இருக்குமாவென
தினமும் திறந்துப் பார்ப்பது
வழக்கம்.
காலை நேரங்களில்
தவிட்டுக் குருவிகள்
தபால் பெட்டி மீது
அமர்ந்தும் பறந்தும்
கொஞ்ச நேரம்
விளையாடிப் போகும்.
அவ்வப் போது தெருவில்
பந்து விளையாடும்
குசும்புக்காரப் பையன்கள்
அப்பெட்டியில்
எப்பொருளையேனும்
போட்டுக் கலாய்த்துக்
குறும்புத்தனம் செய்வர்.
ஓர் தினம் பெட்டியைக்
கவனமாய்த் திறந்துதேன்
உள்ளே
வண்ண அட்டைகளில்
முதியவர்களை,பேண்களை,
சிறுவர்களை,வீடுகளை,
குருவிகளை,விலங்குகளை,
ஸ்கெச்சில் வரைந்தக்
கோமாளிச் சித்திரங்கள்
அச் சிறுவர்களின் கிறுக்கல்
சித்தரிப்புகளைப் பாராட்டிய
என் உதடுகள் மெல்ல
உதிர்த்தது புன்சிரிப்பு.
No comments:
Post a Comment