வைரஸ் தாக்கியும்
டாக்டரை அணுகியதில்லை
கம்ப்யூட்டர்கள்.
விண்மீன்கள்
நீந்தி விளையாடின
ஆற்றுநீரில்...
சில மணித் துளிகளேனும்
உணர்ந்திருப்போமா?
மலர்களின் மௌனம்.
உயிரோடும்; இறந்த பின்னும்
நிலைத்திருப்பது எது?
அவரவருடைய பெயர்.
அணில்களின் பிரியமான
விளையாட்டை ரசித்து
பூக்களுக்குச் சிரிப்பு.
மரங்களற்ற
வெட்ட வெளியில்
நிழல் தேடும் மைனாக்கள்.
No comments:
Post a Comment