யார் உனக்கு அழகிய
பெயர் வைத்தது?
மானிடர் விரும்பும் பூவே....
சிரிப்பின் அலைகள்
உணர்த்தும் சந்தோஷம்
துக்கம் மறந்த மனம்.
நதியில் மிதந்து மிதந்து
வாழ்நாளைக்
கழிக்கிறது
கரையேறாத ஓடம்.
இரகசியங்கள் இருளில்தான்
ஜனிக்கின்றன
யார் பார்வைக்கும் படாமல்...
நிகழ்காலம் நம்மிடம்
அற்புதமான வாழ்க்கை
கணந்தோறும் இருப்பில்....
No comments:
Post a Comment