அவள் முகம் எத்தனை அழகு
உன் எண்ணத்தை வெளிப்படுத்தி
மெல்ல காதல் கொண்டு பழகு.
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்து
அவன் புரிந்தச் சாதனையைப்
பாராட்டி மனமார வாழ்த்து.
விழித்துக் கொண்டது ஆழ்மனம்
உணர்ந்து அனுபவம் பெற்றதினால்
அடங்கி ஒடுங்கியது பெரும்சினம்.
எப்பொழுதுக்கிட்டுமோ வாழ்வில் நிறைவு
ஏக்கமாய் வாட்டி வதைத்தது துயரம்
தாய்தந்தை இருவரின் மறைவு.
அகற்றினேன் கண்ணாடியில் தூசு
படிந்து கொண்டேயிருக்கிறது
மனதில் மாசு.
குரான், பைபிள், கீதை
மானுடத்திற்கு வழி காட்டுவது?
ஒரே இறை நெறிப் பாதை.
No comments:
Post a Comment