வெட்ட வெளியில்
பறந்துத் திரியும்
தும்பிகள்
முகத்தருகே வந்து
யாரோடும் பேசாமல்
விலகி விலகிப்
போகிறது தொலைவாய்,
தன் காதலைச் சொல்லவோ
ஓரு முத்தம் பெறவோ
மலர்களை நெருங்கியும்
விலகியும் மீண்டும்
நெருங்கியும் பறக்கிறது
வண்ணத்துப் பூச்சிகள்
எந்நேரமும்,
அண்மித்துப் பேசிக்
களித்திருந்தக்
காதல் கிளிகள்
அருகே வந்தமர்ந்த
காக்கையைப் பார்த்து விட்டு
வெட்கிப் பறந்தன
இன்னொரு மரந்தேடி,
மறைவிலிருந்தப்
பூனைகள்
ஏதோவொரு
சத்தங்கள் கேட்டு
பயந்துப் பதுங்கி
விலகியோடின
வேறொரு மறைவிடந்தேடி,
பூங்காவிற்குள்
இவ்வளவு நேரமாய்
மனங்கசிந்துருகிப்
பேசிக் கொண்டக்
காதலர்கள் எழுந்து
மௌனமாய்
விலகிப் போனார்கள்
வெளியே,
இப்படி
எந்த ஜீவராசிகளிடமும்
ஆட்கொண்டிருக்கிறது
இந்த
விலகல் விதி.
No comments:
Post a Comment