உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.
தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.
புசித்திடப் பழங்கள்
இலவசமாய் கிடைக்கிறது தினமும்
வனத்தில் விலங்குகளுக்கு.
கசப்பானாலும் இனித்தது
அவள் உபசரித்துக் கொடுத்த
காப்பி...
காடுகள் எரிந்து எங்கும் புகை
பாதுகாப்பாய் வெளியேறின
விலங்குகள்
No comments:
Post a Comment