சிவந்து எரிந்துக்
காந்தியது கண்கள்
எரிச்சல்
திறந்துப் பார்ப்பதற்கே
சிரமப் படுத்தியது.
இருவிழிகளை
முடிப் படுத்துறங்கி
ஒய்வெடுத்தும்
உறுத்தி வதைத்தது
வலி.
அவசரத்திற்கு அருகில்
கண் மருத்துவ மனை
ஏதுமல்லை.
எப்படியிருக்கிறதென்று
அம்மா,வந்து வந்து
கேட்டுப் போவாள்.
அக்கம் பக்கத்தில்
யார் யாரிடமோ
அவசர சிகிச்சைக்கு
ஆலோசனைக் கேட்டாள்.
யாரோ வொரு
கைவைத்தியம் தெரிந்தப்
பாட்டி
அப்படியா?
கொஞ்சம் இரு-என்றாள்.
சிறிது நேரத்தில்
உள்ளே நுழைந்தவள்
கண்ணா,
கண்ணைத் திறடா-என்றாள்.
முந்தானை மறைப்பில்
பாலாடையிலிருந்தப்
பாலைக் கண்களில்
துளித் துளியாய் விட்டாள்.
சில்லென்று குளிர்ந்து
முதல் உதவி செய்தது
பிரசவித்தப் பெண்ணின்
முலைப் பால்.
No comments:
Post a Comment