தெரிந்ததைத்
தெரியாது என்றும்
தெரியாததைத்
தெரியும் என்றும்
பாவனைகள் செய்து
யார் எவரிடமும்
பேசிப்பகிர்ந்துச்
சாமர்த்தியமாய்
காரியம் சாதிக்கும்
சுயநலமிகள்
சமுதாயத்தின்
நச்சுக்கிருமிகள்
பார்க்கும்போதெல்லாம்
நீண்ட ஆயுளோடு
வாழ்வதைப் பற்றி
நினைவூட்டுகிறது
அந்த
ஆயிரங்காலத்து
அடையாறு
ஆலமரம்
தருமனுக்கு எல்லாமே
நல்லதெனத் தெரியுமாம்
துரியோதனுக்கு எல்லாமே
கெட்டதெனத் தெரியுமாம்
ஒவ்வொருவருக்கும்
ஒரு குணம் உண்டு
இதில்
உன்
குணம் எது?
No comments:
Post a Comment