அவனும் மூடன் இவனும் மூடன்..!!
புத்திசாலி ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்
என்று எண்ணி வெகு நாட்களாக ஒரு பெண் காத்திருந்தாள்.
அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அவனைச் சோதனை செய்வதற்காக அவனுடன்
உரையாடினாள். அப்பொழுது அங்கே ‘ சட சட ‘ என்ற சத்தம் கேட்டது. “ அது என்ன? என்று கேட்டான்.
“ அது உடும்பு ” என்றாள்.
“ அதில் ஒரு இறகு எடுத்து வா, காது குடைய வேண்டும் ” என்றான் வந்தவன்.
அதைக் கேட்டு ஏளனத்தோடு “ உடு்ம்புக்கு இறகு இருக்குமா? முட்டாள்
போ ” என்று துரத்திவிட்டாள் அவனை.
சில நாட்களுக்குப் பிறகு, மற்றொருன் வந்தான். அவனிடம் “முன்பு ஒரு
மூடன் வந்து உடும்பிலே இறகு பிடுங்கி வரச் சொன்னான் “ என்றாள்.
அதற்கு அவன் சிரித்துக் கொண்டே, அவன் ஆமை என்று நினைத்தான் போலும் ” என்றான்.
“ நீ அவனைக் காட்டிலும் மூடன் “ என்று இகழ்ந்து. அவனையும் துரத்தி
விட்டாள்.
ஆதாரம் : தமிழகக் கிராமியக் கதைகள் – நூல் – பக்கம் – 74 – 75.
தகவல் ; ந.க.துறைவன்.
*
அருமையான பதிவு
ReplyDeletehttp://ypvn.myartsonline.com/