மைக்ரோ
கதை.
“
தம்பி, உங்க அம்மா இறந்துட்டா. நீ உடனே புறப்பட்டு வாப்பா.”
“
நா எப்படிப்பா, உடனே புறப்பட்டு வர முடியும்? எல்லா ஏற்பாடும் முடிச்சி கிளம்ப வரவே
ரெண்டு நாளாகுமே? ”
”
முயற்சி செய்யிடாப்பா. ”
“
பார்க்கிறேன். இன்னும் அரைமணி நேரத்திலே சொல்றேன்ப்பா ”
சில
மணித்துளிகள் கழித்து.
அப்பா,
நா சனிக்கிழமைதா புறப்பட முடியும். அதுவரைக்கும்
காத்திருக்க வேணாம். அம்மாவுக்கு சடங்கெல்லாம் செஞ்சி முடிங்க. அதை என்னோட நண்பன் வீடியோ
காண்பிரன்சிங்கிலே போட்டுக் காட்டுவா. இங்கிருந்தே பாத்துக்கிறேன் மத்ததெல்லாம் ஊருக்கு வந்து பேசிக்கிறேன்
” என்று போனை துண்டித்துக் கொண்டான் வெளிநாட்டில் வசிக்கும் மகன்.
*
No comments:
Post a Comment