கொள்வோம்…!!
*
1.
முதியோர்களின்
நலனுக்காகப் பாடுபடும் ஹெல்ப்பேஜ் இந்தியா( Helpage India ) எனும் தொண்டு நிறுவனம்
மற்றும் ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2050 – ஆம்
ஆண்டிற்குள் நமது நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு, 20 விழுக்காடாக ஆகிவிடும்
என்றும், தற்போது 10 கோடியாக இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு
மேல் அதிகரித்து 32.4 கோடியாக ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2.
கடந்த
பத்தாண்டுகளில், 62 ஆண்டுகளாகயிருந்த ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 67 – ஆகவும், 64
– ஆக இருந்த பெண்களின் ஆயுள்காலம் கிட்டத்தட்ட 70 – ஆகவும் உயர்ந்துள்ளது.
3.
ஒரு
நாட்டின் மக்கள் தொகையில் 15-யிலிருந்து 59 வயது வரையில் உள்ளவர்கள் உழைக்கும் மக்கள்
என்றும், 0-14 வயது வரையில் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும்
உழைக்கும் மக்களைச் சார்ந்து, அதாவது அவர்கள் ஈட்டும் வருவாயைச் சார்ந்து வாழும் மக்கள்
என்றும் கருதப்படுகிறார்கள்.
4.
சமீபத்தில்
வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையிலிருந்து, நமது நாட்டு
முதியோர்களில் பலர் தீராத வியாதிகளால் அவதிப்படுகிறார்கள் என்றும், அறுபது வயதைத் தாண்டியவர்களில்
எட்டு விழுக்காடு பேர்களும், எண்பது வயதைத் தாண்டியவரகளில் முப்பது விழுக்காட்டிற்கும்
மேற்பட்டவர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அல்லது படுத்த படுக்கையாக
உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.
முதியோர்களின்
உடல்நலனைக் கவனிப்பதற்காக நமது அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனைகளிலு்ம்
Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவப் பிரிவு ஒன்று இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
ஆதாரம்
; “ மூப்படைந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை ” – ரமாமணி சுந்தர் – எழுதிய கட்டுரையிலிருந்து
– தினமணி நாளிதழ் – 11-06-2016.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment