.
நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
பாடல்.
ஆற்றும் கடமையை மறக்காதே – புயல்
காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே – நெஞ்சில்
பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே! ( ஆற்றும் )
எடுத்ததற் கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும் – கொடுமை
எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்! ( ஆற்றும் )
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும் – நீ
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்!.... ( ஆற்றும் )
நீயா நானா. - படம்
No comments:
Post a Comment