மொழி
பிரச்சினை. சில கேள்விகள்?
1.
சமஸ்கிருதம்
உலக மொழி என்றால், அதை இந்தியாவிலே எத்தனை பேர் படிக்கிறார்கள்.. படிச்சியிருக்கிறார்கள்..
எத்தனைப் பேர் பேசுகிறார்கள்? உலக சனத்தொகையில் எவ்வளவு பேர் படிச்சிருக்கிறார்கள்?
பேசுகிறார்கள்?
2.
சும்மாயிருக்கிற
சங்கை எடுத்து ஊதினானாம் ஆண்டி என்கிற மாதிரி, இந்தி ஆட்சி மொழியைப் பின்னுக்குத் தள்ளி
விட்டு இந்துத்துவச் சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது
மத்திய அரசு.
3
இந்திய
அரசால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள, செம்மை
மொழி அந்தஸ்து பெற்றுள்ள மாநில மொழிகளுக்கு சம அந்தஸ்தும் வாய்ப்பும் அளிக்காமல், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு .மட்டும் அதிக
முக்கியம் தருவதற்கான தக்க சூழ்நிலை இந்தியாவில் நிலவுகிறதா? இச் செயல் மற்ற மொழிகளை
அவமானப்படுத்தும் காரியமாக அல்லவா கருத வேண்டியிருக்கிறது.
4.
இந்தி
மொழியை மக்கள் விரும்பி படித்து வருகிறார்கள் அல்லவா. அதே போலவே சமஸ்கிருத மொழியை மக்கள்
விரும்பி படித்து தான் வருகிறார்கள். அப்பணி தொடர்ந்து செயல்படுத்துவதை விடுத்து, அதை
மாநில மக்களின் மீது திணிப்பது என்பது ஆத்திரமூட்டும் செயலாகவே கருத வேண்டியிருக்கிறது.
5.
இந்திய
சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்கிருத மொழி பற்றிய பிரச்சினைகள் அதிகம் எழுந்ததில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பிர்ச்சினையை கையில் எடுக்கிறதென்றால்,
அரசின் நோக்கம் சாதாரண மக்களுக்கும் புரியாமல்
போய்விடுமா என்ன?
6.
ஒரு
பிரச்சியை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருக்குவது அரசின் ராஜதந்திரம். அப்பொழுது தான்
மக்கள் ஒன்றை மறந்து இன்னொன்றை பேசுவார்கள்.
அதைப் பறறின மக்கள் கருத்தினை அறியலாம் என்ற நோக்கில் சமஸ்கிருத மொழி பிரச்சினையை உலவி
விட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
7.
மொழி
பிரச்சினை என்பது உலக அளவில் சர்வதேசிய சிக்கல்களாக இன்னும் நீடிக்கின்றன. அப் பிரச்சினைகளுக்கு
இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment