1.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க
வேண்டாம். – சுப்பிரமணியன் சுவாமிக்கு பிரதமர் கண்டனம்.
ரொம்ப லேட் மோடிஜி. அப்படியே உங்க ஆளுங்களையும்
கண்டிச்சி வையுங்கஜி.
2.
டெல்லி
நிர்பயா – வில் தொடங்கி சென்னை பெண் பொறியாளர் சுவாதி வரை நாடெங்கும் பரவி வருகின்றது
தொடர்க் கொலைகள்.
நாட்டில் பாதுகாப்பு என்பது இருக்கிறதா? என்று
சந்தேகமாகவே இருக்கிறது. பெண்கள் கொலை என்றாலே ஓரே காரணத்தைக் காட்டி விடுகிறார்கள்.
அதன் பின்னணியைப் பற்றி தீர ஆராய்வதில்லை. பிறகு மக்கள் இப்படியொரு சம்பவம் நடந்ததையே
மறந்து விடுவார்கள்.
3.
வறுமையை
ஒழிப்பதே அரசின் பிரதான நோக்கம்.
மத்திய
வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத்தறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
யாருடைய வறுமை ஒழிப்பு என்பது தான் கேள்வி?
செய்தியும்
விமர்சனமும் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment