Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Tuesday 28 June 2016

கல்வியோ கல்வி...!! ( கட்டுரை )





கல்வி என்பது அறிவு வளர்ச்சி சார்ந்தது. விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியது. அனைத்து துறைகளைப் பற்றி கற்றறிதல் என்பது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். பழங்காலக் கல்வி முறை குருகுலக் கல்வியைச் சார்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது. அன்று கல்வி கற்க ஒரு குருவிடம் பிள்ளையைக் கொண்டு போய்விடும் பெற்றோர்,  குருவிற்கு காணிக்கையாகக் குருதட்சிணை அளி்த்து, கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக சேர்த்து விட்டிருக்கிறார்கள். அந்நாளைய குருவிடம் நேர்மை உண்மை மனசாட்சி கற்பித்தல் மீதான அக்கறை என தீவிர வைராக்கியக் குணம் இருந்திருக்கிறது.  அன்று குருதட்சிணையாகத் தொடங்கியதான் இன்று தனியார்த்துறைக் கல்வி நிறுவனங்களில் பெரும் அன்பளிப்பாக,  நன்கொடையாக மாறி பணம் சம்பாதிக்கும் நோக்கம் வலுப்பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.  இன்றைய கல்வி நிறுவனங்களின் நோக்கம் தரமான கல்வியை அளிப்பதை விட, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழி்க்கேற்ப, இச்சந்தர்ப்பத்திலேயே பணத்தைச் சம்பாதித்துக் கொள்வோம் என்று நடுத்தர, மத்தியதர வர்க்கத்தினரிடம் பணத்தை கொள்ளடிக்கிறார்கள். அவர்களும் பிள்ளைகளின் எதிர்காலமாயிற்றே என்று பணத்தை எப்படியாவது சேர்த்து பிள்ளைகளைச் அங்குச் சேர்த்துவிட்டு, பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இன்றைய கல்வியின் நிலைப்பாடு ஆரோக்கியமானதாக இல்லையென்றே சொல்லலாம். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. அரசு தரப்பில் அங்கீகாரம், கண்காணிப்பு, செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் என பல இருந்தாலும், நிறுவனங்கள் அவையெல்லாவற்றையும் மீறி அரசின் கண்ணில் மிளகாய் தூளைத் தூவிவிட்டு எமாற்றவே செய்து வருகின்றன. கல்விக்காகப் பெற்றோர்களை வசியம் செய்யும் மந்திரம் கல்விநிறுவனர்கள் தெளிவாகவே கற்றறிருந்திருக்கிறார்கள். இன்று அல்லல்படும் மக்களின் குமுறல்களைக் கொஞ்சம் காண்போமா?.

1.
1.மருத்துவம்
2. இன்சினியரிங்.  
3. சட்டம் என  தமது பிள்ளைகளின் மேற் படிப்பிற்காக மத்தியதர வர்க்கத்து மக்கள் சம்பாதித்துச் சேமித்தப் பணமெல்லாம் கல்வி நிறுவனங்களிடம் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மேலும் மேலும் கடன் வாங்கி வட்டிக் கட்டிக் கடன்காரர்களாக வேறு மாறி வருகிறார்கள்.
2.
மேற்படிப்பிற்காக மாணவ / மாணவிகள் கல்விப் பயிலும்போதே வங்கிகளில்
; கல்விக் கடன் ‘ வாங்கி கடன்காரர்களாகி விடுகிறார்கள். அவர்கள் படித்து, வேலையில் சேர்ந்து, சம்பாதித்தப் பிறகு அக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இளமையிலேயே கடன்சுமையோடு தொடங்குகிறது அவர்களின் கல்வி வாழ்க்கை.  

3.
கல்வி என்பது முழுக்க முழுக்க வியாபாரமாகி விட்ட நிலையில்
பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலையோடு தவித்து வருகிறார்கள்.

கடந்த இருபது இருபத்தாண்டுகளுக்கு  மேலாக கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் மிகப்பெரிய கோடிஸ்வரர்களாகி விட்டார்கள்
4.
பட்டம் பெற்ற வெளியில் வந்த உடன் தனியார் நிறவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்துவிட்டு திருப்தியில்லாமல் தவிக்கிறார்கள்.  வசதி படைத்த பணக்கார வீட்டு பிள்ளைகள் தனியாக தொழில் தொடங்கி இலாபமோ நஷ்டமோ தங்களது பெற்றோர்களின் உதவியுடன் தகுதியை உயர்த்திக் கொள்ள தொழில் செய்து முன்னேற முயற்சிக்கிறார்கள்.
5.
கிராமபுறத்து நகர்புறத்து மக்களின்  படித்தப் பிள்ளைகளுக்கோ  உரிய நேரத்தில் வேலை கிடைப்பதில்லை. பெற்றோர்களோ கடனில் கண்ணீர் வடித்து வெம்புகிறார்கள்
6.
இன்றைய கார்ப்பரேட் சந்தை உலகம் எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டது. அதிலும கல்வி சந்தை என்பது பெருத்த இலாபம் சம்பாதிக்கும் வர்த்தக நிறுவனங்களாகி விட்டன.
7.
மத்திய / மாநில அரசுகள் கல்வியை தனியார்மயமாக்கியதால், அத்தனியார் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் நாடறிந்த செய்தியாகியிருக்கிறது. அங்கே மாணவ / மாணவிகளைச் சுரண்டும் போக்கும், பாலியல் வன்கொடுமைகளும் சர்வ சாதாரணமாகி விட்டன.. அவர்களுக்கு அங்கு தகுந்தப் பாதுகாப்பு என்பதேயில்லை. அப்படியென்றால் நாட்டில் என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது.
8.
கல்வி வியாபாரப் போக்கினைக் கண்டித்து கல்வியலாளர்களும், நிபுணர்களும் போராடி வருகிறார்கள். உச்சநீதிமன்றமும் தலையிட்டு அவ்வப்பொழுது சீர்திருத்தம் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்து கண்டிக்கவும் செய்கின்றன. ஆனால், அரசு தரப்பின் பதில் என்ன? மௌனம்…. நீண்டதொரு மௌனம்.
9.
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? விடிவு?
ந.க.துறைவன்.

No comments:

Post a Comment