1.
எப்போது
மனம் ஏதோ வொன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதுங்
கொள்ளுவதும்,
உவப்பதுஞ் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.
2.
எப்போது
சித்தம் எதனையும் விரும்பாது, வருந்தாது, தள்ளாது, கொள்ளாது, மகிழாது சீறாதிருக்குமோ அப்போதே
முக்தி.
3.
எப்போது
மனம் சில விஷயங்களிற் பற்றுறுமோ அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ் விஷயத்திலுந்
தோயாதோ அப்போதே வீடு.
4.
நானற்றபோழ்து
விடுதலை.நானுற்ற காலை பந்தம் என்று விளையாடல்போ லறிந்து எதனையுங் கொள்ளாது தள்ளாதிரு.
ஆதாரம்
; அஷ்டாவக்ர கீதை – நூல் – பக்கம் – 26 -27.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment