*
மனசு
சொத்துப் பற்றி நினைப்பதில்லை
மரணத்தைப்
பற்றியும் நினைப்பதில்லை.
*
சந்தோஷம்
வந்தால் ஊஞ்சலாடுகிறது
பேராசையால்
ஊழலில் திளைக்கிறது மனசு.
*
அன்பு
நிறைஞ்சியிருக்கிற மனசிலே தான்
வன்மமும்
மறைஞ்சியிருக்கிறது.
*
உண்மையை
உள்ளுக்குள் மறைச்சி வச்சி
பொய்யை
உண்மைப் போல பேசும் மனசு.
*
தவறு
செய்தவனையும் புரிஞ்சிக்கும்
தவறு
செய்யாதவனையும் புரிஞ்சிக்கும் மனசு.
*
மரத்திற்கு
நல்ல மனசு1
மனிதனுக்கு
குரங்கு மனசு.
No comments:
Post a Comment