*
1.
நான்
கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன். பரவச உணர்வுகளைப் புறக்கணித்தவன். நடக்கும் அனுபவங்கள்
எனக்குப் புதியவை. இந்தக் காற்றும் இந்த அமைதியுமே எனக்குப் புதியவைதாம். அந்தப் பிரார்த்தனை
பூமியில் மனித மனங்கள் சுத்திகரிக்கப் படுகின்றன. அது தெரிகிறது. வெறும் துன்ப அலைகளில்
தவித்தவர்களுக்கு, கரையொதுக்கும், தலை துவட்டும் சந்நதி மாத்திரம் அல்ல அது. அறிவுத்தினவு
வாய்ந்தவருக்கு அதற்கும் அப்பால் என்னவென்னவோ பரிமாறப்படக் காத்திருக்கின்றன.
2.
மனைவி
என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?
யாதுமாகி
நிற்கிறாள் அவள்.
3.
ஆண்களுக்கு
அணிகலன் கோபம். பெண்கள் பொறுமையை அணிந்து கொள்கிறார்கள்.
ஆதாரம்
; “ கைத்தலம் பற்ற ” - எஸ். ஷங்கரநாராயணன்
சிறுகதை நூல்.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment