பருஉடல்…!!
*
நேற்றைய
மனச்சோர்வு இன்றும்
நீங்கவில்லையெனினும்
உளம்
திடமான
தெம்புடன் இருப்பதாகவே
உணர்கிறேன்.
யாரோ ஒருவரின்
குரலின்
தொனி பார்வை என்மீதான
அக்கரையோடு
அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும்
அதனை செவியுறுகிறேன்
என்ன
சொல்வாரோ என்ற தயக்கம்?
என்ன
கேட்பாரோ என்ற வெட்கம்?
எப்படி
உணர்வாரோ என்ற அமைதின்மை?
எனக்குள்
வெளியேறாத வார்த்தைகள்
உள்ளுக்குள்
ஒளிந்துக் கொண்டிருக்கிறது.
என்னறை
எங்கும் வெளிச்சம் மறைந்து
இருள்
சூழ்கிறது. வேம்புக் காற்றில் அலைகின்றன
இலைகள்.
மங்கிய ஒளியெங்கும் பரவிய நேரம்
பறவைகள்
ரெண்டு கடந்து பறந்து போகின்றன.
திறந்த
சன்னல் வழியே கருப்பு இருட்டை
ஊடுருவிப்
பார்க்கிறேன். மின்கம்பத்தின் விளக்கின்
கீழ்
விளையாடிக் களிக்கின்ற விட்டில்கள்
மரணத்
தவிப்பில் உதிர்ந்து உதிர்ந்து வீழ்கின்ற
அந்நொடிப்பொழுது
கனத்துரைந்து அதிர்கின்றன
என்புதோல்
போர்த்திய என் பருஉடல்…!!
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment