மதிய கோடை வெயில்
உக்கிர
அனல் முகத்தைத்
தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின.
கண்கள்
கிறங்கின அந்நொடியில்
எங்கே
ஒதுங்கி நிற்பதென
புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும்
பாதசாரிகள்
வியர்வையை வழித்து
வழித்து
சூரியனை நோக்கி
வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல்
எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய
வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன்.
கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை
படர்ந்த
வானவெளியெலாரு
காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக்
கதிரொளி.
ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment