*
ஏகாந்தப்
பெருவெளியில் பறக்கும்
வண்ணத்துக்களின்
தேடல் எதுவென
இன்னும்
அவைகளுக்குப் புலப்படவில்லயோ?
மலர்களின்
மீதான காதல் பேரின்பப்
பெருங்களிப்பில்
திளைத்து உற்சாக மன
உணர்வில்
பறந்து சிலிர்த்து திரிந்து
அவ்வப்போது
வேறு வேறு
மலர்களிடம்
போய் கலவியின் ரகசியம்
கற்றுத்
திரும்புகிறதோ? கற்பிக்கிறதோ?
இலைகளின்
மீதமர்ந்து இலைகளாகவும்
பூக்களின்
மீதமர்ந்து பூக்களாகவும்
வண்ணங்களாவும்
உருமாறி மாயவித்தைக்
காட்டி
அவைகளின் மனங்களைக் கவர்ந்து
கிளர்ச்சியூட்டி
காமப்பசியில் தவிக்க வைத்து
புன்னகைத்து
வேறொரு மலர்த் தாவிப் பறக்கிறது
சட்டென
நொடிப்பொழுதில் அடித்த காற்றில்
அசைந்தாடும்
பூக்களின் அசைவைக் கண்டு
தூரப்
பறக்கிறது. அலகிலா திருவிளையாடல்
புரிந்து
அகிலத்தையே அசைய வைக்கின்ற
அழகிய
வண்ணத்துப்பூச்சிகள் பிரபஞ்ச
வெளியில்
தன்னிருப்பை உணர்த்தி…!!
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment