*
1.
மத்திய
நகர்புற வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில்
சென்னைக்கு 235 – வது இடம் கிடைத்துள்ளது
ஊழல், டாஸ்மாக் பிரச்சினையைக் கவனிக்கவே நேரமில்லே.
இதிலே தூய்மை வேறயா? தூய்மை என்பது வெளிப்புறம் மட்டுமா?. அகத்திற்கு தேவையில்லையா?
2.
பிஹார்
பாஜக பிரமுகர் வீட்டு முன்பு பசு மாடுகளை கட்டி வைத்ததாக லாலு உட்பட 6 பேர் மீது வழக்கு
பதிவு.
யார் வீட்டு முன்னாலேயேயும் பசுமாடுகளைக்
கட்டாதீங்கப்பா! அவங்க அவங்க வீட்டுக்குள்யே கட்டி வைச்சிகீங்க. மாடு தெய்வம். மனுஷன்
நரன்.
3.
மணல்
குவாரிகளை இனி அரசே ஏற்று நடத்தும். தமிழக அரசு முடிவு.
டாஸ்மாக்கை விட இதுவும் அரசுக்கு ஒரு காமதேனு
தான்.
4.
பூரண
மதுவிலக்கு தமிழகத்தில் எப்போது? அரசுக்கு உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி.
வருமானத்திற் வழி செய்திட்டு பதில் சொல்றோம்.
இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்க என்று கேட்கிறது தமிழக அரசு.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 07-05-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment