தமிழ்நாட்டில்
நடந்து வரும் மர்மக் கொலைகள் சினிமா காட்சிகள் போன்று திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த
காட்சிகளாகத் தினச் செய்திகள் தாங்கி வெளி வருகின்றன. இப்பொழுதெல்லாம் துப்பறியும்
சினிமாக் கதைகள் அதிகம் வெளிவருவதில்லை. என்றாலும், அரசியல்சார்ந்த சம்பவங்களால் நடைபெறும்
ஊழல்களால் இது போன்று மர்மக் கொலைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பலருடைய வாழ்க்கையே
மர்மங்கள் நிறைந்ததாக இச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகம் ஏன் இப்படியாகி விட்டது
என்கின்ற விசனம் பலருடைய மனதில் கேள்விகளாக எழுகின்றன. இதற்கெல்லாம் யார் என்ன பதில்
சொல்லப் போகிறார்கள். எங்கிருந்தும் எந்த பதிலும் வரப்போவதில்லை? எல்லாம் தமிழன் தலையெழுத்து
அதை யாரால் அழிக்க முடியும்? அவன் இதையெல்லாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்று
சொல்கிறார் ஜோதிட சிகாமணி.
குரங்கு
ஜோதிடர் குல்லாசாமி.
*
No comments:
Post a Comment