*
புதுப் புடவையால்
ஏற்பட்ட தாகம்.
*
தொழிலாளி ஒருவன்
தன் மனைவிக்குப் புடவை
ஒன்று வாங்கிக்
கொடுத்தான்.
மனைவி ஆசையோடு
அந்தப் புடவையை உடுத்திக்
கொண்டு, அக்கம்
பக்கம் தெரிந்தவர்கள் வீடுகளுக்குச்
சென்றாள்
.
“ புடவை என்ன விலை?
நல்லா இருக்கிறதே ” என்று
ஒருவராவது அவளைப்
பார்த்துக் கேட்கவில்லை.
“ தாகமாக இருக்கிறது,
புதுப் புடவை கட்டினால் தாகம்
எடுக்கும் போலிருக்கிறது.
தண்ணீர் தாருங்கள் ” என்று
ஒவ்வொரு வீட்டிலும்
சொல்லி தண்ணீர் வாங்கிக்
குடித்தாள் புதுப்
புடவை உடுத்தியவள்.
*
ஆதாரம் :- “ தமிழகக்
கிராமியக் கதைகள் ”
என்ற நூலிலிருந்து.
No comments:
Post a Comment