*
சிட்டுக்குருவி.
*
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
கோபம் என்னம்மா…
அம்மா திட்டினாளென
அழுது படுத்திருக்கா…?
*
தண்ணீரில் விளையாடினால்
சளி என்கிறாளா…அம்மா
மண்ணில் விளையாடினால்
புண்வரும்
என்கிறாளா...
*
குரலெடுத்துப்
பாடினால்
கத்தாதே என்கிறாளா…
பரணிலுள்ள பொம்மைகளை
எடுக்காதே என்கிறாளா…
*
வேகமாய் ஒடினால்….தடுக்கி
விழுவாய் என்கிறாளா…
குதித்து விளையாடினால்
கால் உடையும் என்கிறாளா….
*
சொன்னதைக் கேக்கலன்னா
சங்கதி தெரியும்
என்கிறாளா….
பிடிக்கலன்னா கூட
வாயில்
சோறு திணிக்கிறாளா…?
*
ஆதாரம் :- “ நட்சத்திரப்
பூ “ என்ற நூல்
தெலுங்கு மொழி:
கவிஞர். பூபால்
தமிழில்:- திருமதி.
சாந்தாதத்.
*
No comments:
Post a Comment