*
அரைத்த மாவையே
குழைத்து உருட்டி
பழமைக் கல்லில்
நடுவில் நிறுத்தி
யாப்பு உருளையால்
எண்சீர் அளவுக்கு
இழுத்துத் தேய்த்து
உலர்ந்த உவமை
மாவைத் தூவி
எடுத்துச் சிலேடை
எண்ணெயில் போட
பஃப் என
உப்பிச் சிரித்தது.
அது !
அதை ஆசையாய்
எடுத்து இலையில்
போடும் வேளையில்
ஒரு புதுக் காற்று
‘ குப் ‘ பென வீசிற்று
ஓ !
குனிந்து பார்த்தேன்
உடைந்த அதற்குள்
ஒன்றுமே இல்லை
!!
*
ஆதாரம்:- கவிஞர்.
புவியரசு – வின்
“ இதுதான் “ என்ற
நூலிலிருந்து.
No comments:
Post a Comment