*
‘ இசுன் ‘ ஒரு
பெண் துறவி.
அறுபது ஆண்டுகள்
நிறைந்த பின், மடாலயத்தின் முன்னால்
விறகுக் கட்டைகளை
அடுக்கி தீமூட்டச் சொன்னாள். மற்ற
துறவிகளிடம்.
அவ்வாறே செய்யப்பட்டது.
இசுன் அதன் நடுவில்
போய் அமர்ந்து கொண்டாள்.!
‘ஐயோ ! இது என்ன
? தீ உங்களைப் பற்றிக் கொண்டதே
சுடுமே ! ‘ என்று
கத்தினார்கள் எல்லோரும்.
“ முட்டாள்தனமாய்
உளறாதீர்கள் “ என்று சொல்லிவிட்டு
நெருப்பானாள் இசுன்.
-ஆதாரம் :- “ மீண்டும்
ஜென் கதைகள் “ – என்ற நூலிலிருந்து.
No comments:
Post a Comment