*
பூ இல்லாமலேயே
பழந்தோன்றும் அதிசயம் தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்
‘ பூவில்லாச் சுண்டன் ‘ என்ற
பெயருடைய ஒரு வகை
வாழைப் பழம் மிகவும் சிறப்பானது.
இந்தப் பழம் {வாழைப்
பழம்} வாழைப்பூ இல்லாமலேயே
தோன்றுகின்றதாம்.
*
மண்ணுக்குள் கரி,
தங்கம், வைரம் இருப்பதைக்
கண்டிருக்கிறீர்கள்.
மண்ணுக்குள் மலரும் மலரைக்
கண்டதுண்டா? ரீசன்
டோலியா கார்ட்னர் என்ற செடி
மண்ணுக்குள் மணம்
வீசும் மலரைக் கொண்டது.
இதை ஆஸ்திரேலியா
காடுகளில் நாம் காணலாம்.
*
மத்திய சீனாவில்
உகாஸ் என்னும் மலைப்பாங்கான
காடுகளில் புறா
மரங்கள் உள்ளன. இதன் சிறப்பு
என்ன தெரியுமா?
இம்மரத்தில் பூத்திருக்கும் பூக்கள்
நன்றாக இதழ் விரித்துப்
பறப்பது போலவே அழகாகத்
தோன்றும்.
*
பெலிகன் ,ஃப்ளவர்-
என்றழைக்கப்படும் இந்தப் பூ
பல அடி நீளமானது.
இதன் மலர்கள் நீர்க் கோழியின்
உருவத்தைப்போல்
காணப்படும்.
*
ஆதாரம் :- திரு.
கடல். நாகராசன்- தொகுத்த
“ அதிசய மலர்கள்
1000 “ – என்ற நூலிலிருந்து.
No comments:
Post a Comment