*
மரத்தை
வெட்டிக் கொண்டிருந்தார்கள்
அருகிலிருந்த மரம்
எந்த அசைவுமின்றி
மௌனமாகக் கொஞ்ச நேரம்
பார்த்துக் கொண்டிருந்தது.
என்றேனு மொரு நாள்
நமக்கும்
இந்த கதி தானோ? என்று
சிந்தித்திருக்குமோ?
என்னவோ அப்பொழுது
மரத்தை
வெட்டியவர்கள்
அதனருகில் வந்து
நின்றனர்.
மரம்
பயந்திருக்கும் ?
*
No comments:
Post a Comment