அறியக் கூடியதே
அறிவு எனில்
அவ்வறிவு சாசுவதமான
அறிவல்ல.
பெயரிடக் கூடியதே
பெயர் எனில்
அப்பெயர் சாசுவதமான
பெயரல்ல.
*
பெயரில் அடங்காததே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
மூலம்.
பெயரில் அடங்குவது
பல்லாயிரத்தின்
பெயருக்குத் தாய்.
*
அதனால் தான்
எவரொருவர் பற்றின்றி
இருக்கிறாரோ்
அவரே பிரபஞ்சத்தின்
ஆத்மாவைத்
தரிசிக்கிறார்.
*
எவரொருவர் பற்றின்
பற்றில் இருக்கிறாரோ
அவர் சுற்றியிருக்கும்
பொருட்களின்
மேலோட்டையே காண்கிறார்.
*
இரண்டுக்கும் மூலத்தால்
ஒன்று
என்றால் பெயரால்
வேறு.
அவற்றின் ஒற்றுமை
ஒரு மர்மம்
அதுவே மர்மத்துக்கெல்லாம்
மர்மம்.
அதுவே ஆன்மீகத்தின்
நிலைவாசல்.
*
ஆதாரம் :- சீன
ஞானி லா வோத் ஸு-வின்
“ தௌ த ஜீங் “
என்ற நூல்.
தமிழில்:- “ ஞானமும்
நல்வாழ்க்கையும் “
பேராசிரியர். என்.
ரமணி.
*
No comments:
Post a Comment