*
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை்
ஒரு சொரூப நிலை.
*
நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக
இந்த மனதை
வைத்துக் கொண்டும்
ஒன்றும் செய்ய
முடியாது.
*
,இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்.
*
ஆதாரம்:- “ நகுலன்
கவிதைகள் “ என்ற
நூலிலிருந்து.
No comments:
Post a Comment