*
புதிய அறிவுத் திறன்
புதிய சிந்தனை
புதிய கார்ப்பரேட்
அணுகுமறையோடு
சுறுசுறுப்பாகச்
செயல்படுகின்றன.
புத்துணர்வு முகாமில்
பயிற்சிப் பெற்ற
கோயில் யானைகள்.
*
நமக்கும்
இப்பயிற்சியினைத்
தர மாட்டார்களா? என்று
அரசுக்கு விண்ணப்பித்தன
யானைகள்
புத்துணர்வு முகாமில்
வேடிக்கைப் பார்த்து
வியந்த
வனவிலங்குகள்.
*
முகாமின் இறுதி நாள்
ஓவ்வொரு யானையும்
தத்தமது
அனுபவங்களைப்
பகிர்ந்துக் கொண்டன
“ நாங்கள்
கற்றது குன்றளவு
கல்லாதது காடு அளவு ”.
*
No comments:
Post a Comment