*
அய்யனாரு உருவம்
பாரு
கண்களிலே கோபம்
பாரு
கருத்த மீசை அழகைப்
பாரு
பெரிய வாளைக் கையில்
பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும்
ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப்
பாரு
பத்தினிப் பெண்
தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும்
வெயில் பாரு
வெட்ட வெளியின்
தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப்
பாரு
வெப்பந் தணியும்
உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம்
பாரு
வாலிபர்கள் சேட்டைப்
பாரு
கன்னிப் பெண்கள்
கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப்
பாரு.
*
கிழவிகளின் பக்திப்
பாரு
முதியவர்களின்
குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப்
பாரு
பூசாரியின் சிரிப்பைப்
பாரு.
*
பொங்கப் பானைப்
பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில்
சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல்
பாரு
மாவிளக்கு வரிசைப்
பாரு.
*
கற்பூர ஆரத்திப்
பாரு
கன்னத்திலே போட்டுப்
பாரு
குல தெய்வத்தை
வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள்
நாளும் பாரு.
அப்படியே கிராமத்திற்கு சென்ற நிலையில் மெய் மறந்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...