*
தொடல்
உடைமையின்
முத்திரை
உறவின்
வழித் துணை.
*
மூச்சை
மூச்சென்று உணர்ந்து
மூச்சை
மூச்சாக ஓரு கணம்
சிந்தித்தாலே
மூச்சு திணறுகிறது.
*
வாய்
அமுதம் பொழிகின்றது
கண்
கணக்கெடுக்கிறது
சுவர்மேல்
சூர்ய கிரணம் சிரிக்கிறது.
*
கரைகள்
என்ன குறுகினும்
நான்
இக்கரை
அவள்
எதிர்க்கரை
நன்றி:-
அமரர்.திரு. லா.ச.ராமாமிருதம் எழுதிய
“அபிதா”-நாவலிலிருந்து..
No comments:
Post a Comment