நீலநிலா
செண்பகராஜன் ஹைக்கூ கவிதைகள்
*
எத்தனைக்
கவிதைகள் எழுதினாலும்
அத்தனையும்
ஈடாகுமோ?
குழந்தையின்
சிரிப்பு…!
*
அழகாய்
இருந்தும் ரசிக்க முடியவில்லை
இறந்தவர்
கழுத்தை
அலங்கரிக்கும்
மாலை.
*
சிதறிய
கவிதை யாரால்
வாசிக்க
முடியும்
இளம்
பெண்ணின் சிரிப்பொலி.
*
தூங்காமல்
கவிதை
எழுதனேன்
விழித்திருக்கும்
அறிவுப் பசி.
*
ஆதாரம்:-
“மௌனம் பேசும் வார்த்தைகள்”
என்ற
தொகுப்பிலிருந்து.
No comments:
Post a Comment