நண்பர்கள்…
*
தாயுமாகி உதவிச்
செய்தத் தியாக முகம்
ஓயாது என்றும்
துணையிருந்தத் துறைமுகம்
நட்புக்கு இலக்கணமாய்
திகழ்ந்த திருமுகம்
அன்பு முகமானக்
கீதா ஆறுமுகம்.
*
சாமியை வணங்காத
நாத்திகச் சாமி
ஓமக்குச்சி உடல்
தேகச் சாமி்
இசைப் பாடல் பாடும்
அய்யா சாமி.
மீசைத் தடவிப்
பேசிடும் முனுசாமி.
*
தீயப் பழக்க மில்லாதத்
திகம்பரச் சாமி
மெல்ல உதட்டில்
சிரிக்கும் மௌனச் சாமி.
கரும்பாய் பேசிப்பேசி
இனிக்கும் நல்லச் சாமி.
குறும்புத் தம்பிச்
சுறுசுறுப்புக் குப்புச் சாமி.
*
ஊரில் நடக்கும்
குசும்பு சம்பவங்களை
உணர்ச்சித் தூண்டும்
பாவளையில்
புணர்ச்சிக் கதைகள்
சொல்லிச் சொல்லி
உறங்காமல் செய்வார்
சுப்பைய்யா வாத்தியயார்.
*
,இன்னும் பலப்பல
இனிய நண்பர்கள்
இவ்வணியில் உண்டு
நிறையச் சொல்லிடவே
இன்று எங்கெங்கோ
இருக்கிறார்கள்-நினைவில்
இனிதே வாழ்ந்து
வருகிறார்கள் எனது நண்பர்கள்.
No comments:
Post a Comment