சிறுவர் பாடல்
காற்றின் இசையைப்
பறவைகள் கேட்கும்
அருவியின் இசையை
மலைகள் கேட்கும்
கடன் இசையை
சிப்பிகள் கேட்கும்
படகின் இசையை
மீன்கள் கேட்கும்
இடியின் இசையை
மேகங்கள் கேட்கும்
மழையின் இசையை
தவளைகள் கேட்கும்
குயில்களின் இசையை
மரங்கள் கேட்கும்
மயில்களின் இசையை
மான்கள் கேட்கும்
நதியின் இசையை
நாணல்கள் கேட்கும்
வண்டின் இசையை
பூக்கள் கேட்கும்
இலைகளின் இசையை
அணில்கள் கேட்கும்
வளைகரங்களின் இசையை
பயிர்கள் கேட்கும்
இசையின் உள்ளொளி
உணர்வில் இயங்கும்
இசையில் மயங்கி
உயிர்கள் ஒடுங்கும்.
No comments:
Post a Comment