*
கல்விதனைத் துறந்தவன்
கடமையாற்றத் தெரிந்தவன்
பகுத்தறிவு செறிந்தவன்
பகல் ஒளிபோல் வாழ்த்தவன்
*
தியாக உள்ளம் மிகுந்தவன்
திறமையோடு வாழ்ந்தவன்
சுதந்திரம் பெற ஏங்கியவன்
சுறுசுறுப்பாய் இயங்கியவன்
*
இளைஞர்களைக் கவர்ந்தவன்
இனிய கனவை விதைத்தவன்
புதிய பாரதம் காண எழுந்தவன்
தூக்கில் தொங்கி மடிந்தவன்
*
சத்தியத்தை மதித்தவன்
சாகசங்கள் புரிந்தவன்
சாவுக்கும் அஞ்சிடாமல்
சமர்புரிந்து வாழ்ந்தவன்
*
அந்நியரை எதிர்த்தவன்
அடிமைகளைக் காத்தவன்
அன்னை நாட்டு விடுதலைக்கு
அர்ப்பணங்கள் செய்தவன்.
*
No comments:
Post a Comment