அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை.
*
அவன்
எப்படிப்பட்ட
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன்
என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று
கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம்
கேட்டார்கள்ர
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன்
என்று
அவன் வீட்டில்
வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத்
தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன்
என்று
ஒரு மனிதனிடம்
கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப் புராணத்தைத்
தைரியமாய் சில
நொடிகளில்
புட்டுப் புட்டு
வைத்தான்.
*
No comments:
Post a Comment