ந.க.துறைவனின்
சிறுவர் பாடல்.
*
தாடி மாமா வந்தாரு
தூக்கிக் கொஞ்சி
சிரிப்பாரு
அம்மா அப்பா எங்கேன்னு
அன்பா மெல்ல கேட்பாரு.
தம்பிப் பயலின்
சுட்டித் தனத்தைக்
கேட்டுக் கேட்டு
ரசிப்பாரு
சாக்லெட் பிஸ்கெட்
மி்க்சரு
தம்பிக்கும் எனக்கும்
கொடுப்பாரு.
சுற்றி வரும் நாய்க்
குட்டியைத்
துரத்தி துரத்திப்
புடிப்பாரு
சட்டெனத் தூக்கி
அணைச்சி
மடியில் வைச்சி
மகிழ்வாரு.
பாட்டுக் கதைகள்
சொல்லிச் சொல்லி
பாடச் சொல்லிக்
கேட்பாரு.
மடிக் கணினி மடியில்
வைச்சி
அபாகஸ் கற்றுத்
தருவாரு.
மாலைவேளை
வெளியிலே
அழைச்சிக் கிட்டுப்
போவாரு
சுற்றுச் சூழல்
மாசுப் பற்றி
கதை கதையாகச் சொல்வாரு.
தயங்கித் தயங்கி
நின்னாரு
டாட்டா காட்டிப்
போனாரு
ஊருக்குப் போயி
சேர்ந்த வுடனே
போனில் பேசிச்
சொன்னாரு…!!
சிறப்பான கவிதை வரிகளுக்கும் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா .
http://blogintamil.blogspot.ch/2014/03/blog-post_12.html
வலைச்சரம் ஊடாக வந்தேன் ரசித்தேன். கவிதை வரிகள் சிறப்பே. அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்....!
ReplyDelete