*
பேச்சுக்குப்
பேச்சுப்
புரிகிறதா, புரிகிறதா? என்று
பேசிக்
கொள்கிறார்கள்.
எது
புரிந்தது எது பரியாதது?
என்பதெல்லாம்
சொல்பவர்க்கும்
கேட்பவர்க்கும்
மட்டு்ம் தானே தெரியும்?
அவர்களது பேச்சுத் திறன்
உங்களுக்குப் புரிகிறதா?
இன்னும் பலருக்கும்
புரியாமலேயே இருக்கிறது
அந்தப் பூடகமானப்
பேச்சின் சாரம்.
அப்படிப் பேசிக் கொண்டே
போனதில் வீணாய் கழிகிறது
பொன்னான நேரம்.
.
No comments:
Post a Comment