திருமதி ஜோன்ஸ் என்பவர்
கடுமையான மனஉலைச்சலுக்கு ஆளானதால், மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றார்.
“ என் கணவர் தான் ஒரு கோழியாக
மாறிவிட்டதாக நம்பத் தொடங்கினார். வெளியே சென்று குப்பையைச் சதா கிளறுகிறார்.
உயரமான இடத்தில் இருக்கும் நீளமான பெரிய கழி மீது அமர்ந்து தூங்குகிறார் ” என்று
அவள் டாக்டரிடம் சொன்னாள்.
“ அப்படியா! இந்த மனநிலையில்
உங்கள் கணவர் எவ்வளவு காலம் இருந்து கொண்டிருக்கிறார். ” என்று டாக்டர் கேட்டார்.
” சுமார் இரண்டு வருடகாலமாக
இப்படி இருக்கிறார் ”
மனோதத்துவ நிபுணர் முகத்தில்
சற்றே கோபம் தென்பட,
“ இவ்வளவு நாள் மருத்துவ
ஆலோசனை பெறாமல் ஏன் தாமதம் செய்தீர்கள்? ” என்று கேட்டார்.
திருமதி ஜோன்ஸ் முகம் சிவக்க,
“ தொடர்ந்து முட்டை கிடைத்தவரை பிர்சனை இல்லாதிருந்தது. ” என்றாள்.
ஆதாரம் ; ஓஷோவின் “
சப்தமில்லாத சப்தம் ” – நூல் – பக்கம் – 151 – 152.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment