*
1.
இந்திய குடியரசு
தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி.
அவருக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
2.
சிறு வயதில்
இருந்தபோது மண் சுவரால் சூழ்ந்த கூரை வீட்டில் வசித்தோம். மழை பெய்தால்
வீட்டுக்குள் ஒழுகும். இதனால் மழை விடும் வரை நானும் எனது சகோதர, சகோதரிகளும் சுவர்
ஓரம் ஒதுங்கி நிற்போம்.
நாடு
முழுவதும் என்னைப்போல பலர், இன்றும் விவசாயி வேலையிலும், கூலிவேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மழையில் நனைந்தும் வியர்வை சிந்தியும்
கஷ்டப்படுகின்றனர். உங்கள் அனைவரின் பிரதிநிதியாக நான் குடியரசுத் தலைவர்
அலுவலகத்திற்குச் செல்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வளமுடன் வாழ
அயராது பாடுபடுவேன்.
இந்த
உறுதி மொழியோடு நாட்டுக்கு பணியாற்றினால் போதும். ஆனால் மக்களுக்கு எதிராக
செயல்பட்டால் எல்லோரையும் போல நீங்களும் ரப்பர் ஸ்டாம்பு தான் என்பது உண்மையாகி
விடும்.
3.
மாதவிடாய்
காலத்தில் முதல்நாளில் பெண் பணியாளர்களுக்கு விடுமுறை. அறிமுகப்படுத்துகிறது “
மாத்ரு பூமி ” செய்தி நிறுவனம்.
பாராட்டுக்குரிய
செயல்பாடு. இந்திய அரசு இதனை முன்னுதாரமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆதாரம். தி
இந்து – நாளிதழ் – 21-07-2017.
தகவல் ;
ந.க.துறைவன்.
No comments:
Post a Comment