1.
ஆடிவெள்ளியில்
அழகாய்
அம்மன் சிரிக்கிறாள்
பக்தைகள்
மனசுக்குள்ளே
ஆயிரம்
பிரார்த்தனைகள்.
2.
சிவப்பு தான்
அவளின்
குறியீடு.
3.
நெற்றியில்
தானிருக்கிறது
அவளின்
வெற்றித் திலகம்.
4.
அவள் என்
மானசீக
சௌந்தர்ய
லஹரி.
5.
ஆடி தள்ளுபடியில்
வாங்கிய
பட்டுப்புடவையைச்
சாத்தினால்
கன்னிப்பெண்.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment