ஒருவர் சுவாமி அரவிந்தரைப்
பார்த்து “ உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? ” என்று கேட்டார். “ இல்லை ” என்று
பதிலளித்தார் சுவாமி. கேள்வி கேட்டவர் அதிர்ந்து போனார். தொலைதூர தேசமான
ஜெர்மனியில் இருந்து அவர் வந்திருந்தார். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடன்
வந்திருந்த அந்த மனிதரிடம் அரவிந்தர், தனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது என்று சாதாரணமாக
பதில் தந்துவிட்டார்.
“ நான் உங்களுக்குக் கடவுள்
பற்றித் தெரியும் என்று நினைத்திருந்தேன் ” என்றார் ஜெர்மனியர்.
“ ஆமாம்! எனக்குத் தெரியும்.
ஆனால் நான் கடவுளை நம்பவில்லை ” என்று கூறினார் அரவிந்தர்.
ஆதாரம் ; “ சத்தமில்லாத
சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 112 – 113.
தகவல் ‘ந.க. துறைவன்.
No comments:
Post a Comment