1.
இதயத்தில்
இடம் கேட்டவளுக்கு
கிடைத்தது
கல்லறை.
2.
வருவோர் போவோர்
சிலநாள்
தங்குமிடம்
இந்த உலகம்.
3.
சுவையாய் இருந்தது
சைவம் இல்லாத
நகைச்சுவை
விருந்து.
4.
காதலுக்கும் உண்டு
அடைக்கும் தாழ்.
5.
மரணத்திற்கு
தெரியுமா?
மனிதனை…!
6.
உயிருக்கு ஆபத்தென்று
கயிலை மலைவிட்டு
வெளியேறினார் சிவன்.
7.
உயர் அதிகாரி மரணம்
எரிந்தப் பிணத்தின்
கை நீண்டது
சில்லறை வைத்தார்கள்
தாழ்ந்தது கை.
ந.க. துறைவன்.
*
No comments:
Post a Comment