*
ஞானத்தைத்
தேடி
நான்
வந்தேன் என்று
வாசலில்
நின்றிருந்தான்.
எந்த
ஞானத்தைத் தேடி
வந்தாய்
என்று கேட்டான்?
ஞானம்
தெரியாது? உனக்கு
அவள்
தான் ஞானம்.
எப்பொழுதும்
கூடவே இருப்பாளே?
அவள்
தான் ஞானம்.
இங்கே
அப்படி எந்த ஞானமும்
இல்லையே?
இருந்தாள்.
எனக்குத்
தெரியும் அவள்
இங்கே
தான் இருந்தாள்
நீங்க
மறைக்கிறீங்க?
உனக்கென்ன
பைத்தியமா?
பிடிச்சிருக்கு
இல்லாதவளை
இருந்தாள்
என்று
சொல்கிறாய்?அவள்
இங்கே
எப்போது இருந்தாள்?
அவள்
இருந்தாள் தானே
நீயிருக்க
முடியும்?
நானிருக்க
முடியும்?
அவளைப்
போய் அப்பட்டமாய்
இல்லையென்று
சொல்கிறாயே?
என்னுடன்
எப்பொழுதுமே
உடனுறைந்திருக்கிறாள்
என்
ஞானம். அவளே மோனம்.
ந.க.துறைவன்.
*
ஞானம் தேடும் படலம்
ReplyDeleteஅருமை!