*
கோடைக்
காலத்தில் வேலூர் என்பதை வெய்யிலூர் என்றே அழைக்கப்படுகின்றது. அந்த அளவுக்கு வெப்பநிலை
கடுமையாக இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் வெப்பநிலைக் குறைந்தபாடில்லை. அதற்கேற்ற வகையில்
இயற்கைச் சுற்றுச்சூழல் அமைந்திருக்க வேண்டும். பசுமையான மரங்கள், நீர்நிலைகள் அவற்றை
ஓரளவுக்கு சமப்படுத்தும். இங்குள்ள பரந்த பாலாறு கடுமையாக வறண்டு காணப்படுகின்றது.
நகரைச் சுற்றியுள்ள இடங்களில் ஏரிகள், குளங்கள் கூட மிக மோசமாக வறண்டுக் கிடக்கின்றது.
மேலும்,
கோடைகாலம் துவக்கத் தொடங்குவதற்கு முன்னரே, வெயில் தன் கோரமுகத்தை காட்டத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னர் சத்துவாச்சாரியில் உள்ள டபுல் ரோட்டில் உள்ள மரங்களை
வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் வெட்டியெறிய ஆயத்தமான செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக
ஒன்று திரண்டு அம்மரங்களை வெட்டக்கூடாது என்று
முழக்கமிட்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், அங்குள்ள மரங்களை வெட்டுவது தவிர்க்கப்பட்டது.
நிறுத்தப்பட்டது.
பாதைகளிலும்,
வீடுகளின் முன்பும் இருக்கின்ற பசுமையான மரங்கள் தான் தற்போதைய வெப்பநிலைக் குறைப்பிற்கு
சற்று ஆறுதல் தரக்கூடியதாக அமைந்துள்ளன. மரங்களை வளர்ப்போம் என்று விளம்பரம் போர்டுகள்
ஒவ்வொரு அலுவலகத்திலும் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே இடத்திலிருந்து தான் மரங்களை
வெட்டியெறி என்கின்ற ஆணையும் வெளி வருகின்றன. என்னவொரு முரண்பாடான அரசின் நிலைப்பாடு.
மனிதர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் மனிதர்களே ஈடுபட்டு வாழ்வதென்பது மிகக் கேவலமானதொரு
செயல்பாடுகள். மரங்கள் உரம் தரும். உயிர் தரும் வளம் வரும் காப்போம். வாழவைப்போம்!!
ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment